துரும்பாகித் தவிக்குது

பணத்தைக் கொட்டி அரசியலை
பாழ்படுத்தி வாழுறான் !
இனத்தைக் காட்டி நாட்டினிலே
இனிய சுகம் கொள்ளுறான் !

மதத்தைக் கூறி மானுடத்தை
மதிமயங்க வைக்கிறான்
அதர்ம வாழ்வை என்றுமவன்
அரசியலில் திணிக்கிறான் !

மக்கள் நலனை மறந்துவிட்டு
மந்தையாகி கிடக்கிறான்
தக்கவரை ஒதுக்கி விட்டு
தலைவனாக ஓடுறான்!

சுதந்திரமாய் நாட்டிலென்றும்
தவறுகளைச் செய்யுறான் !
அதிகாரப் போதையிலே
ஆணவமாய் நடக்குறான் !

வென்றெடுத்த சுதந்திரம்
வீணாகிக் கிடக்குது ...
துன்பப் பட்ட மக்களினம்
துரும்பாகி தவிக்குது......

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (2-Nov-17, 10:09 pm)
பார்வை : 76

மேலே