விருப்பத்தை அறிவதும் அருஞ்செயலே

விதையொன்று போட்டு
தழைக்கும்வரை தவித்து
பூத்தவுடன் பறித்தெடுத்து
விற்றுமகிழும் கூட்டமிது ....!
கன்றுக்குட்டி வாங்கிவந்து
கடைக்குட்டி போல்வளர்த்து
எடைக்கு வந்ததும்
பேரம்பேசும் கூட்டமிது..!
தவமாய் தவமிருந்து
பெற்றெடுத்து ஆளாக்கி-நேசமுடன்
மங்கை பருவம்வர
மணமுடிக்கும் கூட்டமிது...!
பாசத்தில் ஐயமில்லை-ஆனால்
செடியை கேட்பதில்லை
பசுவை கேட்டதில்லை-பெண்
பாவையை கேட்பதில்லை...
பெற்றதும் வளர்த்ததும் பெருஞ்செயலே...!
விருப்பத்தை அறிவதும் அருஞ்செயலே...!

எழுதியவர் : காசி.தங்கராசு (3-Nov-17, 3:55 am)
பார்வை : 67

மேலே