நவீன ராட்சஸர்கள்

இன்றைய அரசியல்வாதிகளின் மழைக்காலக் கூட்டத்தொடர் போல், ராட்சசர்களின் கூட்டம் அணி வகுத்து அங்கு தலைவன் உட்பட, அனைவரும் சிறிதுநேரம் அமைதியாக இருந்தனர்.

பிறகு அவரவர் சார்பில் பேச ஆரம்பித்தனர். ஓருவன் எழுந்து பேசத் தொடங்கினான்.
இப்பொழுதேல்லாம் அசுரர்களிடம்- தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பயம் குறைந்துவிட்டது.

இதற்கு, ஏதாவது பெரிய திட்டம் தீட்டவேண்டும், அதன்படி செயல்பட்டு அவர்களை காவுவாங்கவேண்டும், பயப்படச் செய்யவேண்டும், அதற்கு ஓரு சிறந்த வழி யாராவது கூறுங்கள் என்றான். இதைக்கேட்டு அனைவரும் யோசிக்கத் தொடங்கினர்

முன்காலத்தில் தேவர்களும், நம்மவர்களும் போட்ட சண்டையில் தேவர்களும், ராட்சசர்களும் காணாது போய்விட்டனர் இப்பொது யாரும் இல்லை என, மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால்,நாம் இத்தனைக் காலம், மறைந்து வாழ்ந்தது எதற்காக? இந்த மனித குலத்தைப் பாழக்கத்தானே! என்றான்.

அதற்கு இன்னொருவன் எழுந்து கூறினான்- ஆனால் இப்போழுது மனிதர் கூட்டம் நவீன மயத்துக்கு மாறியுள்ளனர். எப்படிப்பட்ட வீரன் வந்தாலும், யுத்தம் வந்தாலும் அவர்கள் திருப்பி தாக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தவர்கள் என்றான். சிறிது நேரம் கழித்து, ஓருவன் தன் யோசனையைக் கூறினான்.

நாம் அனைவரும் தொல்லைகள் தரும் மிகச்சிறிய பூச்சிகளாக மாறுவோம், அவர்களை அழிப்போம் அதாவது, கொசுக்களாக, ஈக்களாக மாறுவோம் அப்போது நம்மை அவர்கள், அவர்களின் மிகப்பெரிய சத்ருக்களாக எதிர்கொள்வார்கள் என்றான்.

அதைக்கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர் அதை ஆமோதித்தனர். சிலர்தொல்லைதரும், நோய்களை பரப்பும், ஈக்களாக மாறினர் என்றால், பலர் மிகக்கொடிய நோய்களைப் பரப்பும் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கொசுக்களாக உருவெடுத்தனர். மக்களை கூட்டம் கூட்டமாக அழிக்கவும், கஷ்டம் கொடுக்கவும் முடிவெடுத்து மக்களுக்குத் தங்கள் மேல் பயம் வரும் என நினைத்து, சந்தோசத்துடன் புறப்பட்டு சென்றனர் பூலோகத்திற்கு!

எழுதியவர் : சுபத்ரா (5-Nov-17, 2:00 pm)
பார்வை : 693

மேலே