விந்தைகளும் நிகழும்
சாய்ந்து நின்றாலும்
ஆய்ந்து அறிகின்ற
கூர்ந்து நோக்கிடும்
பார்வை தெரிகின்றது !
ஆளப்போகும் சமூகத்தை
ஆழமாக அளக்கின்றதோ
அசையாத விழிகொண்டு
அறிந்திடத் துடிக்கிறதோ !
வளரும் தலைமுறைக்கு
கிளர்ந்தெழும் எண்ணங்கள்
உருவாக்கும் மாற்றத்தை
உலகிற்கும் பயன்பெறும் !
சிந்திக்கும் ஆற்றலால்
சிந்தையும் தெளிவுறும்
விந்தைகளும் நிகழும்
வியந்திடும் அளவிற்கு !
பழனி குமார்