தமிழ்

கூரிய வாள் கொண்டு
வெட்டினாலும் - எங்கள்
கேடயம் ஒன்றே!!
தேகம் வேறுபட்டாலும்
போற்றுகின்ற - எங்கள்
சரணம் ஒன்றே!!
கலைகள் பல
நிகழ்ந்தாலும் - எங்கள்
ஆரம்பம் ஒன்றே!!
பல்வகை மொழி
பயின்றாலும் - எங்கள்
ஆதி ஒன்றே!!
போர்கள் பல
புரிந்தாலும் - எங்கள்
வேட்கை ஒன்றே!!
வேதங்கள் பல
பெருகினாலும் - எங்கள்
உயிர் மெய் என்றும் ஒன்றே!!
- மூ.முத்துச்செல்வி