பெண்சில் முனை

வாழ்வின் போராட்டங்களில்,
வளைந்து கொடுக்க - எனக்கு
வழிகள் எதுவும் தெரியவில்லை...!

எடுத்த காரியங்கள்,
எல்லாமே தொடர்ந்து - எனக்கு
தோல்விகளையே கொடுத்தது...!

மற்றவர்களிடம் வலிகளை,
மனம்விட்டு பகிர்து கொண்டால்...
ஏளனப் பார்வைக்கு நாமே – வாசல்
அமைத்துக் கொடுத்துவிடுவோமோ என்ற,
ஏக்கத்தில் காகிதத்தை எடுத்தேன்...!

மனதின் வலிகளை கவிதைகளாக,
எழுதத் துவங்கினேன்...!

சிறிது நேரத்தில் முனை கரைந்தது...!
பென்சிலை சீவி மீண்டும் எழுதினேன்...!!

சுவாரஸ்யமாக எழுதும் வேளையில்,
முனை ஒடிந்தது...!

பென்சிலை சீவி மீண்டும் எழுதினேன்...!!

தொடர்ந்து செயலை மீண்டும் தொடர,
சிந்தையில் சட்டென்று உதித்தது...!

தேவை என்று தெரிந்ததால்...
நொடிந்த போதும் சரிசெய்து...
உபயோகிக்கத் தெரிந்த - நமக்கு

வாழ்வின் தேவையறிந்து,
நொடிந்த போது – நம்மை
சரிசெய்யத் தெரிவில்லை ஏன்...?

- என்று
சிந்தித்துக் கொண்டே – என்
உள்ளத்திற்கு ஊக்கம் கொடுத்து...!
வாழ்க்கையை வாழத் தொடங்கினேன்...!!
நொடிந்தாலும் எழுவேன் என்ற நம்பிக்கையோடு்...

Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (22-Nov-17, 2:35 pm)
பார்வை : 494

மேலே