வருவாயோ

தினம் எழுதும்
வரிகள் கவிதையாகிறது
உன்னை எழுதும்
வரிகள் கவிதையாகிறது

மனம் உமிழும்
வலிகள் கவிதையாகிறது
ஆசை சேர்த்த
விதைகள் செடியாகிறது

மரம் தேடும்
உரம் நீயாகிறாய்
மனம் பூக்கும்
சிறு பூவாகிறாய்
மதம் பிடித்த
யானை நானாகிறேன்

மயில் என
மனதின் தோகையானாய்
மணம் என
மனசுக்குள் சேர்கிறாய்


விறல் சேர்த்து
கை கோர்ப்பாயோ
விதி முழுதும்
உடன் வருவாயோ

எழுதியவர் : யாழினி வளன் (27-Nov-17, 9:37 pm)
சேர்த்தது : யாழினி வளன்
Tanglish : varuvayo
பார்வை : 127

மேலே