எதிரிகளின் கவிதை

சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
நம் பெற்றோர் உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
இனி "எதிரிகள்" என்று...

* நீயும் நானும் வேறு வேறாய்
இருக்க நம்மில் வேர் விட்ட
நம் காதலுக்கு
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"

* நம் காதல் வளர்த்த
கடற்க்கரை மணலுக்கும்,
காதல் பேசி நம் காலடி வந்த
கடற்க்கரை அலைகளுக்கும்
சொல்லி விடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"

* குற்றவாளிகள் போல்
நம்மை குத்திக் கூடையும்
நம் சொந்தங்களின்
பார்வைக்கு பட்டென்று
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்" என்று..


* விலகிப் போகிறோம்
என்று தெரிந்தும்,
விலகாமல் நமைத்தடுக்கும்
நம் நட்புக்கு
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"

ஆம் !!!!
* எதிர்ப்படும் வாழ்க்கை
நமக்காய் இருந்தும்,
திருமணமாக உன் தங்கைக்கும்,
மணமாக காத்திருக்கும்
என் சகோதரிக்குமாய்
நம் காதல் போட்டுக்கொண்டது
ஒரு முகமூடி..

* உனைப்பிரிந்து என்
நலம் விசாரிப்புகளும்
நலமற்று போக...
எனைத் தீண்டும் உன் பார்வையின்
ஆளுமை எனை விட்டு போக,
நடை பிணமென அலைந்துகொண்டிருக்கிறேன் ,
நீ நலமாய் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்
எனைத்தேற்றிக் கொள்கிறேன்,
காரணம்
நீயும் நானும்

இனி "எதிரிகள்"

* நம் காதல் தோல்வியைத்
தழுவியது என்று யாரேனும்
சொன்னால், தயங்காமல்
சொல், உன்னை நானும்,
என்னை நீயும், உயிர் இருக்கும்வரை
நம் உயிரில் கருவாய் சுமப்போம்...
ஏன்னென்றால்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"

* எதிர்படும் எல்லாரும் நமக்கு
எதிரியாய்ப்போக, காதலை
சுமந்துகொண்டு,காலத்தின் முன்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"


* சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
பெற்றோர் உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
"எதிரிகள்" என்று...

எழுதியவர் : (7-Dec-17, 5:16 pm)
பார்வை : 2524

மேலே