மனைவி

தலைமுறை! தலைமுறையாய்! எத்தனை உறவுகள்!
..
இல்லங்கள் முழுவதும் உறவுகள் நிறைந்து பொளனர்மியாக ஒளித்தாலும்!
..
மனைவி இல்லாத தனி ஒருவன் இல்லத்தில் அமாவாசையாக இருளில் தவிக்கின்றான்!
..
எங்கோ பிறந்து, வளர்ந்து சுகந்திரமாக வாழ்து வந்தவளை!
..
திருமணம் என்ற கல்லூரியில் மனைவி என்ற பட்டம் கொடுத்தேன்!
..
வீடு வரையில் உறவுகள் இருந்தாலும் என்னை வீதி வரையில் வந்து வழியனுப்புவாள்!
..
ஒரு நிமிடம் காணவில்லை என்றால் ஒரு மணி நேரம் என்னிடம் பேசிடுவாள்!
..
எனக்கு உடலில் வலி என்றால் அவளது உடலை வில்லாக வளைத்து உதவிடுவாள்!
..
தனியாக ஒரு நாள் பிரிந்து சென்றாலும் எப்போது வருவார் என கேட்காமல் கேட்டுவிடுவாள்!
..
வயதான காலத்திலும் இந்த தாத்தாவுக்காக ( எனக்காக ) வாசல் படியில் வசந்த ராகங்கள் பாடி வருவாள்!
..
இத்தனை மகிழ்ச்சி மனைவியிடம் கொட்டி கிடக்கும் போது!
..
நீ மகிழ்ச்சிக்காக மலை பிரதேசம் போகலாமா!
..
மனைவியை மகிழ்ச்சியாக கையாண்டு பார்!
..
மல்லிகை பூக்களும் அங்கே உன்னை வரவேற்க தயாராக இருக்கும்!
..
- ஜோதிட கவிஞர் -
செந்தில் வேலவர்

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (15-Dec-17, 11:32 pm)
Tanglish : manaivi
பார்வை : 101

மேலே