கட்டியவன் கைவிட்டால்

​​கொதிக்கும் உலையை
ஆற்றிட முடியும்
தகித்திடும் உள்ளத்தை
தேற்றிட இயலுமா !

​கைப்பிடித்த கணவனும்
​கைவிட்டுச் சென்றான் ​
​இணைந்தே இருந்தவன்
இருந்தும் என்னபயன் !

கடுகளவு தவறையும்
மலையளவு நினைத்து
குற்றம் கூறுபவர்கள்
நக்கீரர் வழித்தோன்றலோ !

​அணைத்தால் நெருப்பும்
​அடங்கிடும் அடுப்பில்
​அணைப்பவன் தீயானால்
​அழிந்திடும் இல்லறமும் !

​கட்டியவன் கைவிட்டால்
பட்டுவிடும் வாழ்க்கையும்
​எட்டிநிற்பவன் கெட்டவனாகி
​தொட்டிடவும் நினைப்பான் ​!

​​ஓடுகின்ற நதியில் ​
​ஒற்றைப் படகன்றோ
​வாழ்வெனும் களத்தில்
போராடும் இப்பெண்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Dec-17, 4:20 pm)
பார்வை : 386

மேலே