அன்பில் அதிரும் தந்திகள்

எதற்காக என்று
எல்லோர்க்கும்
சொல்வதற்கில்லை

நேருக்கு நேர் நின்று
விழிக்குள்
இறங்கும் பார்வையில்
ஏதேனும் புரியக்கூடும்

நினைவின் மகரந்தம்
ஒட்டிக்கொண்ட
வண்ணத்துப் பூச்சியின்
முகவரி
காற்றில் எழுதப் பட்டிருக்கலாம்

முழுதும் இழக்க
துணிந்த மனம்தான்
மொத்தமும் பெறத் தகுதியானது

இரவல் நதிகளில்
கால் நனைத்துவிட்டு
அமுத மழையில் குளித்ததாய்
பாசாங்கு செய்யலாம்

உண்மையாய்
துடிக்கும் இதயத்தில்
யுகத்தின் பிறப்பொலி
ஒளிந்திருக்கும்

அன்பின் மீட்டலில்
அதிரும் தந்திகள்
உயிரின் சுருதியை
சுமந்துவரும்

இதயம் திறந்திரு
என் இரகசியப் பாடலை
புரிந்து சிலிர்க்கும் வரை !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (28-Dec-17, 12:21 am)
பார்வை : 309

மேலே