வேண்டாம் விட்டுவிடுங்கள்

கணவன்-மனைவி
ஒருவரையொருவர்
ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியில்
ஏமாறிப் போவது
ஏதுமறியாப் பிள்ளைகள்தான்.
அவர்களின் கனவுகளை
கல்லெறிந்து
கலைத்து விடாதீர்கள்..!
அவர்களின் உறக்கம் கலைந்துவிட்டால்,
நீங்கள் உறங்க மாட்டீர்கள் !

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:07 pm)
பார்வை : 241

மேலே