முடவன்

மழை நின்ற பின் விரியும்
காளான் குடைகளைக் காண்கையில்
காலால் கசக்கிவிட நாடுகிறேன்.
நாலைந்து கறையான்கள்
களைப்பில்
கண்ணயர்ந்திருப்பது கண்டு
முடவனாகிறேன்.

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:14 pm)
பார்வை : 64

மேலே