வேசியின் வேள்வி

சரீரத்தை சதைபிண்டமாக்கி
சந்தையின் போகப்பொருளாக்கி
கசாப்பு கடை நடத்தும்
வெட்கம் கெட்ட வேசியே
ஆத்மா என்று ஓன்று உள்ளே
இருப்பதை மறந்து விட்டாயா
என்று கேட்டது ஆத்மா

நாக்கை தொங்கப்போட்டு
அலையும் நாய்களாய்
சதை தின்னும் பருந்துகளாய்
காமக் கழுகுகளாய் திரியும்
சமூகத்திடம் கேள் இந்தக் கேள்வியை

ஒவ்வொரு நாளும் உள்ளே உருகி
இறைவனை நினைத்து
வேதனையை வெட்கத்தை
வெந்து உருகும் உணர்சிகளை
அவிப் பொருளாக்கி
உள்ளே ஒரு வேள்வி தீ
வளர்க்கிறேன்.

நான் இறந்தபின்
ஆத்மாவே
உனக்கு நிச்சயம்
உய்வு உண்டு
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-11, 11:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 368

மேலே