மண்ணின் மணம்

ஒப்பனை காட்டும் முகங்களில்லை
ஒப்புக் காகச் சிரிக்கவில்லை,
தப்பிலா கிராமக் காதலிலே
தழைத்த திந்தத் திருமணமே,
செப்பிட வார்த்தை ஏதுமில்லை
சொந்த மண்ணின் நாணமிது,
இப்படித் தொடங்கிடும் மணவாழ்வில்
இனிதே வாழ்க மணமக்களே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jan-18, 7:48 am)
பார்வை : 57

மேலே