தை மகளே_வா

தளிர்நடை_நடந்து_
தை மகளே_வா//
தரணி எங்கும்
உந்தன் ஆதியும் அந்தமும் _சொல்லி வா/

கோர்வையாக கண்ணீர் கோர்த்திருக்கின்றேன்//

கருணை கண் காட்டி//
கானல் வாழ்வை கருவறுக்க
_ கானம் பாடி வா

காலத்தின் பெட்டகமாய்
காவியங்கள் முளைத்திடவே//
உன் அழகை காட்டி _ஆடி வா

கருத்துகளின் கருவிடமாய்
காற்றில் தென்றலாய் மிளிர்கிறாய்//
நீ தரணி எங்கும் வளர்ந்து விடவே
_புரண்டு திரண்டு வா

உன் தாயின் சுகம்
சுகமாகவே தொடருதென
உற்சாகம் தந்து //

வாழ்வெல்லாம் கவிதை எழுதிவிட//
கரம் கொடுக்கவே விரைந்து _வா

எழுதியவர் : காலையடி அகிலன் (13-Jan-18, 10:59 am)
பார்வை : 79

மேலே