புத்தகம் புதுயுகம்

வெள்ளை தாளை விலைபேசிய
கரும் புள்ளிகள்
வாசிக்கின்றவரை வசீகரிக்கும்
வருடங்கள் கடந்திருக்கும்
உலகையே ஒரு தாளில் அடைத்திடும்
உலகிற்க்கே ஒரு வரியில் விடை கொடுத்திடும்
கண் இல்லாதவரும் கண்டது உண்டு
கண்களுக்கு விருந்தாக இவை உண்டு
புத்தனுக்கும் இதில் இடம் உண்டு
பித்தனுக்கும் இதில் இடம் உண்டு
அறிவுற்றவனுக்கு அலைகடல் போல்
அழியா மொழி .

எழுதியவர் : சண்முகவேல் (21-Jan-18, 9:19 am)
பார்வை : 232

மேலே