ஆத்தங்கரை ஓரத்திலே

ஆத்தங்கரை ஓரத்திலே,
அந்தி சாயும் நேரத்திலே,
ஊத்துதண்ணி எடுக்க போரவலே,
ஒத்தாசிக்கு நானும் வாரேன்டி,
கைமத்த முத்தம் ஒன்னு தாயேன்டி,

அந்த ஆலமரத்து அடியினிலே,
குயில் பாட்டை கேட்டுகிட்டே,
மாமன் தேளுல சாஞ்சுக்கடி,

ஆத்து காத்துல மேனி நடுங்குது,
கொஞ்சம் மூச்சு காத்த
தந்து அணைச்சு போயேன்டி,

ஆயிரமீனப் போல ஏன்டி நலுவுர,
முறை மாமன் தானடி
முறைச்சு பார்க்கதடி,

எழுதியவர் : செநா (2-Feb-18, 10:11 pm)
பார்வை : 1192

மேலே