தீயாரோடு இணங்கி இருப்பதுவுந் தீது – மூதுரை 9

நேரிசை வெண்பா

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ(டு)
இணங்கி யிருப்பதுவுந் தீது. 9 - மூதுரை

பொருளுரை:

தீயகுணம் உடையவரைக் காண்பதுவும் தீது பயக்கும்; தீயகுணம் உடைய வருடைய பயனற்ற சொற்களைக் கேட்பதுவும் தீது பயக்கும்;

தீயவருடைய தீய குணங் களைப் பேசுதலும் தீமையானதே; அத் தீயவருடன் இணக்கமாக நட்புடன் கூடியிருப்பதும் தீமையே ஏற்படுத்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-18, 2:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 112

மேலே