நெஞ்சம் முழுதும் நீ நீ நீ

கலைமகளே என்ன கலைகள் புரிகிறாய்
நொடியினில் எப்படி மனதில்
நுழைகிறாய்
உன்மாயங்கள் அறிய
உண்மையைத் தேடினேன்
அது மறைகிற வேளையில்-மனம்
அயர்ந்துதான்போயினேன்
அடி
உன் வசீகரத்தின் துவக்கமே என் அறிவினில் தானோ...அல்லது
என் உடம்பினில் பரவிடும் உணர்வினில் தானோ
அறைகுறை பதிலே இதனுள்
வருதே
நிறைபதில் எனக்குள் எப்போது
வருமோ?
உறங்கினால் உன்முகமே மலர்கின்றதே
இருளின் இடையே நிலவாய் தெரிகின்றதே
மண்ணிலே வான்மழை
பொழிவது போல்
நெஞ்சிலே தேன்மழை
பொழிகின்றதே
காற்றோடு கரையும் கனவாக இல்லாமல்
நிலைத்து நிற்பவளே நீ யாரோ
என் மூச்சோடு கலந்து நிலைத்தவளே
நீ வேறோ... நான் வேறோ

அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (4-Feb-18, 7:57 pm)
பார்வை : 245

மேலே