காதலி

உன் கண்களால் தான் என்னவோ
உலகம் சொர்க்கமாக காட்சி அளிக்கின்றதோ!

உன் கண்ணீர்துளிகளால் தான் என்னவோ
உலகிற்கு மழை பேய்கின்றதோ!

உன் கால்களினால் தான் என்னவோ
பூத்துக்குலுங்கும் நிலமாக மாறியோதோ!

உன் கூந்தலால் தான் என்னவோ
பூக்களுக்கு வாசனை உண்டானோதோ!

உன் பொன்சிரிப்பினால் தான் என்னவோ
மகிழ்ச்சி என்ற சொல் உருவானோதோ!

உன் மனத்தினால் தான் என்னவோ
எல்லோருக்கும் இரக்கம் உண்டானோதோ!

உன் அழகினால் தான் என்னவோ
என் கவிதை பிறந்ததோ!

-முத்துக்குமார்.

எழுதியவர் : முத்துக்குமார் (5-Feb-18, 12:42 pm)
Tanglish : kathali
பார்வை : 247

மேலே