ஏன் நானும் மனிதனானேன்

ஏன் நானும் மனிதனானேன் ..................
நீராய் இருந்திருந்தால்....
அவள் பாத்திரத்திற்கேற்ப
மாறியிருப்பேன்.......
காற்றாய் இருந்திருந்தால் ...
அவள் வெற்றிடங்களையெல்லாம்
நிரம்பியிருப்பேன்........
மேகமாய் இருந்திருந்தால்.......
சூரியனை மறைத்து நிழல்
கொடுத்திருப்பேன் .......
நெருப்பாய் இருந்திருந்தால்
அவள் வாழ்வில் ஒளி
கொடுத்திருப்பேன் .....
நிலமாய் இருந்திருந்தால்....
அவள் நிழல்களையெல்லாம் எல்லாம்
ஏந்தியிருப்பேன் ....
இப்படி ஏதும் இல்லாமல்
ஏன் நானும் மனிதனானேன் ...
அவளுக்கு தொலைதூரமானேன்....!

எழுதியவர் : ரேஷ்மா (8-Feb-18, 4:16 pm)
பார்வை : 193

மேலே