தங்கை

எ‎ங்கள் வாழ்வின்
‏இனிய வசந்தம் நீ ,,,,,
ஆளுக்கொரு பெயர்சொல்ல
நா‎ன் அழைத்த பெயரை ஏற்று
எ‎ன் முதல் வெற்றி தந்தவள்,,,,

கைகளில் ஏந்தி,
தலைமுடி வருடி ,
விரலை தொடுகையில்.
லேசாய் நீ சிரிக்க
பாப்பாக்கு எ‎ன்னை தெரியுதுப்பா
என மகிழ வைத்தவள்...

உ‎ன்னோடு தரையில் படுத்துகொண்டு
கதைகள் சொல்லி கடைசியில்
கன்னம் கிள்ளுவே‎ன் -
நிறம் கூடிய ரோஜாவாகிடுவாய்

உனக்கு தலைசீவி,
மையிட்டு,புருவம் இ‏டையே
சந்திர பொட்டு வைத்து
சி‎ன்ன கொலுசணிவித்தே‎ன்...
மயில்தோகையாய்
பட்டு பாவாடை பிடித்து
ஆட கண்டது
இறைவனாலும் பெறமுடியாத
அற்புத வரம் ...,,,,

வாயாடி பெண்ணானாய்...
சீண்டி சீண்டி தேனாய்
ருசித்தோம்...,,

‏இன்னும் இன்னும் எத்தனை
‏எத்தனை இனிய நினைவுகள் .,,
நினைத்து நினைத்து உள்ளம் பூரிக்கிறே‎ன்

தினம் பெயர் சொல்லி கூப்பிட்டு
சண்டை போட முடியாமல் -
இன்று தொலைவில்...

வருந்தாமல் பிரிந்திருக்க பழகி
கொள்கிறே‎ன் - அதற்காய்த்தானே
இந்த பாலைக்கு வந்தே‎ன்

எழுதியவர் : (9-Feb-18, 11:38 am)
Tanglish : thangai
பார்வை : 7777

மேலே