தங்கை
எங்கள் வாழ்வின்
இனிய வசந்தம் நீ ,,,,,
ஆளுக்கொரு பெயர்சொல்ல
நான் அழைத்த பெயரை ஏற்று
என் முதல் வெற்றி தந்தவள்,,,,
கைகளில் ஏந்தி,
தலைமுடி வருடி ,
விரலை தொடுகையில்.
லேசாய் நீ சிரிக்க
பாப்பாக்கு என்னை தெரியுதுப்பா
என மகிழ வைத்தவள்...
உன்னோடு தரையில் படுத்துகொண்டு
கதைகள் சொல்லி கடைசியில்
கன்னம் கிள்ளுவேன் -
நிறம் கூடிய ரோஜாவாகிடுவாய்
உனக்கு தலைசீவி,
மையிட்டு,புருவம் இடையே
சந்திர பொட்டு வைத்து
சின்ன கொலுசணிவித்தேன்...
மயில்தோகையாய்
பட்டு பாவாடை பிடித்து
ஆட கண்டது
இறைவனாலும் பெறமுடியாத
அற்புத வரம் ...,,,,
வாயாடி பெண்ணானாய்...
சீண்டி சீண்டி தேனாய்
ருசித்தோம்...,,
இன்னும் இன்னும் எத்தனை
எத்தனை இனிய நினைவுகள் .,,
நினைத்து நினைத்து உள்ளம் பூரிக்கிறேன்
தினம் பெயர் சொல்லி கூப்பிட்டு
சண்டை போட முடியாமல் -
இன்று தொலைவில்...
வருந்தாமல் பிரிந்திருக்க பழகி
கொள்கிறேன் - அதற்காய்த்தானே
இந்த பாலைக்கு வந்தேன்