இனி சேர்ந்து வாழவே முடியாது

கீரியும் பாம்பும் சேர்ந்து வாழ முடியாது .
ஆடும் புலியும் சேர்ந்து வாழ முடியாது

எலியும் பூனையும் சேர்ந்து வாழ முடியாது
கன்றும் பன்றியும் சேர்ந்து வாழ முடியாது

மானும் சிங்கமும் சேர்ந்து வாழ முடியாது
பூச்சியும் பல்லியும் சேர்ந்து வாழ முடியாது

சேனல் 4 பார்த்த பின் இனி சேர்ந்து வாழவே முடியாது
சேர்ந்து வாழச் சொல்வது மடத் தனமானது

தமிழரும் சிங்களரும் இனி சேர்ந்து வாழவே முடியாது
தனித் தனியே வாழ்வதுதான் இருவருக்கும் நல்லது

காட்டுமிராண்டிகளை விட மோசமான சிங்கள ராணுவம்
விலங்குகளைவிட கொடூரமான இலங்கை ராணுவம்

அன்பை போதித்த புத்தரை வணங்கும் சிங்களருக்கு
அன்பு என்றால் என்னவென்று தெரியவில்லை

ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் புத்தர் அன்று '
சிங்களரின் பேராசையே இலங்கையின் அழிவுக்குக் காரணமானது

சிங்களரில் நல்லவர்கள் மிக மிகக் குறைவு
தமிழர்களில் கெட்டவர்கள் மிக மிகக் குறைவு

சந்திரிகாவின் மகன் போன்ற ஒரு சில சிங்களரே
சக மனிதன் துன்பம் புரிந்து அழுகின்றனர்

இம் என்றால் சிறை ஏன்? என்றால் கொலை
எப்படி ?இனி இணைந்து வாழ முடியும்

சேனல் 4 பார்த்த பின் இனி சேர்ந்து வாழவே முடியாது
சேர்ந்து வாழச் சொல்வது மடத் தனமானது
--

எழுதியவர் : era .eravi (5-Aug-11, 10:19 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 459

மேலே