கவித்துளி
சகுனம் பார்த்துவிட்டு சாலையில் வந்தான்
இவனால் அடிபட்ட பூனை
கண்ணீருடன் இவனைப் பார்த்தது
=================================
நடனமாடிக் கிடந்தது
காற்றின் பாடலுக்கு
குளத்து நீர்
=================================
வண்ணத்துப் பூச்சியின் சிணுங்கலில்
மெல்ல மலர்ந்தது
பூ
=================================
கரையை தொட்டதை கணக்கில் ஏற்றாததால்
மீண்டும் முதலிலிருந்து எண்ணச் சொன்னது
அலை
=====================================
நஷ்டத்திலும் கஷ்டத்திலும் ஓடியது
மழைக்குப் பின்னான
காகிதக் கப்பல்
=====================================