விழியோரச் சாரல்

​பருவத்தின் தாபத்தால் பற்றியது மோகத்தீ ​
​--​விளைந்த காதலால் வீழ்ந்தது இதயமும் !
தொடர்ந்த சந்திப்பால் குறைந்த இடைவெளி
​--தொடாத கரங்களும் தொட்டது இடையை !

காணாத விழிகளும் களைத்துப் போனது ​
​--பாராத நொடிகள் துடிப்பைக் கூட்டியது
​அழுகின்ற நெஞ்சால் கண்கள் நிறைந்தது
​--மூடிய விழியோரம் சாரலாய் தெறித்தது !​


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Feb-18, 9:54 pm)
பார்வை : 158

மேலே