இனியேனும்

இலை உதிர்ந்து சருகாக
இளவேனில் போய் பனி வந்தது
இருள் அகன்று ஒளி வர
இளஞ் சூரியன் எழுந்துவந்தான்
இரை தேடும் பசிப்புலியும்
இச்சை உடன் காத்திருந்தது
இதயமில்லா கயவர் ஒழிக்கப்பல
இரக்கமுள்ள பெண்டிரும் எழுந்தனர்
இனவெறி கொண்ட கொடியவர் ஒழிக
இன்னும் எத்தனை உயிர்களோ!
இலுப்பம்பூச் சக்கரையாப் பல
இள உடல்கள் சிதைந்து போயின
இசை பாடும் மூங்கிலும்
இப்போராட்டத்தில் உதவியது ஆனால்
இக்கரையில் உள்ள பலர்
இனயேனும் சிந்திப்பாரா!

எழுதியவர் : (5-Dec-09, 2:16 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 813

மேலே