ஒத்தையில போறவளே

களத்து மேட்டுல ஒத்தையில போறவளே,
மாமன்தானே கூப்புடுறேன் கொஞ்சம் நில்லுபுள்ள,
கண்டும் காணமால் போவது ஏனோ,

இடுப்பு சிறுத்தவளே இறுமாப்ப போறவளே,
சும்மாட்டை இறக்குபுள்ள மாமாவோட பேசுபுள்ள,

வண்டுகண்ணால அம்புவீசி வீறாப்ப போறவளே,
கொலுசு வாங்கிதாறேன் கொஞ்ச வாடிபுள்ள,

எட்டுமுழ சேலைகட்டி ஏகத்தளமாக போறவளே
முந்தானையில வேர்வைத்துடைத்து முத்தமுன்னு தாடிபுள்ள,

மாமன்தானே கூப்புடுறேன்
கொஞ்சம் நில்லுபுள்ள..........................

எழுதியவர் : புதுகை செநா (28-Feb-18, 10:17 pm)
சேர்த்தது : வாசு
பார்வை : 964

மேலே