நீயும் நானும்
தமிழ் மொழியே,
இளஞ்சிவப்பில் கூரை நெய்து
அதை நனைக்காமல் ஏந்திக் கொள்ளும் நதி அமைத்து
வானம்பாடியின் மெல்லிசையில் வரவேற்பு கீதம் இசைத்து
அவ்விசைக்கு சுருதி சேர்க்கும் நதியின் நீரோட்டம் உருவாக்கி இயற்கை வரைந்த ரம்மியமான சித்திரமெனும்
இவ்வுலகிற்கு மேலும் அழகு சேர்க்கும் ஒப்பனையாய்…..
நீயும் நானும்!!