என்னவளே

வாழ்க்கையில் பல இடங்களில் தடுக்கி விழுந்து மீண்டெழுந்திருக்கிறேன்,
ஆனால் என்னவளின் கன்னக்குழியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்…!

கடற்கரை எங்கும் தேடி பார்க்கிறேன்,
அலைகள் முத்தென நினைத்து எடுத்துச் சென்ற என்னவளின் பெயரை..!

என்னவளே அறிவாயா:
என்னுள் தோன்றிய முதல் காதலுக்கும்…
உன்னை முதலில் சந்தித்த நாளுக்கும் ஒரே வயது என்பதை அறிவாயா…!

எழுதியவர் : சரோ (29-Mar-18, 10:19 am)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : ennavale
பார்வை : 447

மேலே