அப்பத்தா

காட்டுக் கீரையில்
உன் கைமணமும்
சேர்ந்து கிண்டிய
களி யின் நெய்மணமும்
எத்தனை ஜென்மம்
வீசுமம்மா !

மம்முட்டி புடுச்சு
கூடை தூக்கி
விறகு வெட்டி
சிவந்த விரல
வெற்றிலை மடிச்சு
மறச்சிட்டையே !

சுருக்குப்பை இடுப்புல
பொறக்காத ஒருப்புள்ள
வெட்டுப்பாக்கு நடுவுல
தேஞ்சுபோன சில்லர
பதிஞ்சுபோன ரேக
வளரவேயில்ல

ஆம்பிள செத்ததும்
வீட்டோட கெடக்கல
விதிக்கு கால்முளைச்சா
வீதிக்கும் முளைக்கும்னு
படிக்க தெரியாம
பாரதியானையே!

கட்டாந்தரை கம்பளி
எப்போதும் உனக்கிருக்க
எத்தனை விரிப்பிருந்தும்
உன்னருகே நானுறங்க
தூக்கஉச்சத்திலும் விசுற
மறக்கலையே!

என்னக்கு புடிக்கும்னு
பட்டினிய மறச்சுவைப்ப
உன்னக்கு புடிக்கும்னு
பொய்ய உறிச்சுவைப்பேன்
எப்படியும் கண்டுபுடுச்சு
பாசம்மூட்டுவையே!

விரல்பிடுச்சு நடக்கவெச்ச
கதைசொல்லி கடவுளான
ஆடுமேய்க்க சொல்லித்தந்த.
உன்ன எங்கப்பாவுக்கு
அம்மான்னு ஊர்பூரா
சொல்லுறாங்க !

எவன்கிட்டயும் ஏமாறாம
எமன்கிட்ட ஏமாந்த
உன் மேல
நெருப்பு பட்டதும்
நான் எரிஞ்சு
சாம்பலானேன்!

நான் பார்த்த
வெள்ளை முடி
சட்டிக்குள்ள சிரிக்குது
அழுகாம முடியுள
அப்பத்தா என்னபெத்த
ஆத்தா !

எழுதியவர் : (5-Apr-18, 8:37 pm)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 506

மேலே