காவேரியே கேள்
தனிநாடு வேண்டாம்
தலைநாடாக மாறுவோம்!
தாங்கும் கீழ்நாடு என்று
உதைக்கிறார்களோ!
நாம் இல்லையேல்
நாடும் ஊனமே!
அடிமை என்று நினைத்தால்
உதிரம் உதிர்த்து
விண்ணிற்கு உரைப்போம்
எங்கள் வீரத்தை
மழலை என்று
ஏளனம் செய்தால்
மாவீரர்களாக மாறுவோம்
உழவன் என்று மிதித்தால்
தலைநிமிர்ந்து சொல்வோம்
உனக்கும் உணவளிப்பவர்
நாங்கள் என்று!
காவேரியே! கேள்
உன் சகோதரிகளைக் காத்து
இயற்கை செழிப்புடன்
வரவேற்போம் உன்னை!
- மூ.முத்துச்செல்வி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
