காதல் மலர்ந்தது

கண் மலர்ந்தாள்
பூம்பாவை அவள்,
அந்த பார்வையின்
தாக்கம் என்
வாழ்வின் வித்தானது.

அவள் வாய் திறந்தாள்,
பவளம் பிளந்து
முத்துக்கள் தெரிய,
அது புன்னகையாய் மலர,
அவள் வாய் மொழிந்தாள், சோலைக்குயிலாய்,
அன்பே என்றழைத்தாள்,
காதல் கமலம் மலர்ந்ததுவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Apr-18, 3:30 am)
பார்வை : 115

மேலே