ஒருதலைக் காதல்...
வானத்து மேகமாய் எல்லையில்லா என் காதல்
நகரத்துப் பெண்மயிலே உனக்குத்தான் புரியவில்லை! இருந்தும்
உன் மேல் நான் கொண்ட காதல் குறையவில்லை!
நீ பூக்களை நேசிக்கிறாய்
புன்னகையை நேசிக்கிறாய்
நான் உன்னை மட்டும்தானடி நேசிக்கிறேன் நீ என்னை மட்டும் நேசிக்க யோசிப்பதேனடி?...
இதயத்தை குத்திவிட்டது உன் ஈட்டிப் பார்வை நீ வந்து ஒட்டிக்கொள்ள வேண்டாம் எட்டி நின்று பார்த்தேனும் அதன் காயம் ஆற்றடி!...
உன் புன்னகை குளத்தில் மூழ்கிய என் மனத் தாமரையை நீ வேரறிந்து வெட்டி விட்டாய் எனைப் பார்த்து ஏனடி புன்னகை இரத்து செய்துவிட்டாய்!
என் நரம்பில் பண்ணிசைக்கும் பெண்பசையே நீ நிற்பதுதான் எனக்கு உயிர்த்திசையே! ..
அன்று என் இதயத்தை கொத்திச் சென்றாய் இன்று ஏனடி சொத்தை என்றாய்!
என் உயிரே நீதான் என்கிறேன் அந்தப் பதவி போதவில்லையா? அடிப் பாவி அதைவிட உயர்ந்தப் பதவி என்னிடம் இல்லடி...!
நாணம் உன்னை கட்டி இழுக்கிறதென்று பூமி என்னைப் பிளந்து உள்ளிழுக்க விட்டுவிடாதே!...
ஒரு நிமிடம் நில்லடி எனைப் பார்த்து சொல்லடி நான் அழகா இல்லையா? இல்லைஉன் அழகுக்கு இணை இல்லையா?..
பிடித்திருக்கிறது என்றால் உயிர்த் தருவேன் பிடிக்கவில்லை என்றால் உயிர்த் துறப்பேன்!...
ஒரு நிமிடம் நில்லடி..
எனைப்பார்த்து சொல்லடி!..