காதல் பல்கலைக்கழகம்

இவள்
முகத்தில் பல்லையும்
கலையையும் கொண்டுள்ளதால்
இவளும் ஒரு
பல்கலைக்கழகமே

இக்கழகத்தில்
அழகியல் ஒன்றே பாடம்

இங்கே மாணவர்கள் சேருவதில்லை
பெற்றோருக்கு அஞ்சாத
வீரமானவர்கள் மட்டும் சேருகின்றனர்

மரத்தடியில் பாடம் நடக்கும்
அவள் மடியில்

இங்கே புத்தகம் தேவையில்லை
புத்தான அகம்தான் தேவை

இங்கே மதிப்பெண் கிடைக்காது
மதி பெண் கிடைக்கும்

பட்டம் கிட்டாது
திருமணமானால் மட்டும்
பட்டம் கட்டுவார்கள்

புதுவைக் குமார்

எழுதியவர் : புதுவை குமார் (16-Apr-18, 12:07 pm)
பார்வை : 128

மேலே