கடலிலே விண்மீன்

கடலிலே விண்மீன்கள்
நீந்தும் அந்த காட்சியுந்தன்
விழியிலே தோன்றும்-அது
உண்மையடி...
நடுக்கடலில் முகம்பார்க்கும்
இரவில் வரும் முழுநிலவே
மூழ்காது காதல்-இது
உண்மையடி...
நடுநெஞ்சில் நீந்துதே காதல்
மைவிழிகள் நனையுதே நெஞ்சில்
கண்ணிமைக்கும் பொழுதில்-என்னை
நெஞ்சில் நினைவில்லாமல்
மறக்காதே...
கடல் அலைவீசாதே!!
நீரருவி ஓடிவந்து
நெஞ்சத்தை மூழ்கடிக்கும்
ஆனாலும் காதல்
கரையேறிவிடும்...
கண்முன்னே காதல்வந்து
மரமாகத் தோன்றுமடி
மரம்சாயும் பொழுது
முழு ஜென்மமடி...
பலமயிலின் இறகுகள் சேர்த்து-உன்
ஆடைசெய்கிறேன் பார்த்து-என்
நிழலும் உனைக்கண்டு
நனைவதென்ன நீ ஒருவார்த்தை-உன்
வாய்பேசாதா??

எழுதியவர் : sahulhameed (20-Apr-18, 6:30 pm)
சேர்த்தது : HSHameed
Tanglish : kadalilay vinmeen
பார்வை : 107

மேலே