இழப்பதும் இன்பமே

ஒலி தன்னை
காற்றிடம் இழப்பதால்..
மொழி பிறக்கிறது...!
மழை தன்னை
மண்ணிடம் இழப்பதால்..
பசுமை பிறக்கிறது...!
நிறம் தன்னை
தூரிகையிடம் இழப்பதால்..
ஓவியம் பிறக்கிறது..!
கற்பனை தன்னை
வார்த்தைகளிடம்
இழப்பதால்...
கவிதை பிறக்கிறது...!
உணர்வுகள் தன்னை
உண்மையிடம்
இழப்பதால்...
காதல் பிறக்கிறது...!
ஒருவேளை
இழப்பு என்பதும்
இன்பம்தானோ?
என்னை
உன்னிடம்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (21-Apr-18, 11:02 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : ilappathum inbame
பார்வை : 617

மேலே