ஒளிக்காட்டில் என் மௌனம்

எங்கும் நிரம்பி வழிகிறது

இருள் குழப்பிய சிந்தனை…

ஊரெங்கும் மொய்த்த சப்த உண்ணி

இரைச்சலுடன் நின்றது என்னருகில் இரையெனக் கொள்ள.

அஞ்சித் ததும்பிய தும்பியாய்

துள்ளிக் கிளம்பிய கால்கள்

கலைந்து குலைந்தன

புதரினில் சிக்குண்ட மானாய்.

காரிருள் கூரிய வளைபல் காட்டி

நெருக்கிப் பிணைத்தது.

வன்மம் முறைத்த நாக்கினுள்

ஏறிய உயிரின் நறுஞ்சுவையில்

வால் நெளித்த வன்னிருள்

ஊதிப் பெருக்கிய கடுஞ்சிரிப்பில்

வெடித்துச் சிதறின ஆழ்கடல் சங்கு.

ஊண் மரமென வி றைத்த உடலில்

வந்து சேர்ந்தன அகால பட்சிகள்…

நிர்வாண சொற்கள் குழைந்தன

காற்று கமறிய கணத்தில்…

விட்டுப்பிரிந்த அடர்குரல் முழங்க

சுடரென ஒளிர்ந்தது என் மௌனம்.

நன்றி.
வணக்கம் லண்டன்.காம்
ஏப்ரல் 3,2018

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Apr-18, 5:53 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 54

மேலே