நம்பிக்கை பந்தல்


வானவில் கனவுகளை
சுமந்து திரிகிறோம்
கை அருகே பூத்துக் குலுங்கும்
மலர்களை மறந்து விடுகிறோம்

மலையும் சிகரமும்
மலை ஏறுபவர்களுக்கு இலக்கு
உனக்கும் எனக்கும் என்ன பயன்

தொட நினைக்கும் வானமும் உயரமும்
எப்போதும் நமக்கருகில் இருப்பதில்லை
தொடமுடியாது போகும்போதும்
தோல்வியில் ஓடும் போதும்
அந்த வானமே உன்னை பார்த்து சிரிக்கும்

முத்துக் குளிப்பவனுக்கு
ஆழ் கடலின் ஆழம்தான் இல்லைக்கு
அவனுக்கு எதற்கு எவரெஸ்ட்

வானமும் நிலவும் சூரியனும்
எல்லோருக்கும் பொதுவானது
பூமி ஒவ்வொருவனுக்கும்
ஒவ்வொரு விதமானது
இதுதான் வானுக்கும் பூமிக்கும்
உள்ள பெரிய வித்தியாசம்

எழுதியவர் : (10-Aug-11, 5:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nambikkai panthal
பார்வை : 274

மேலே