காணாதக் கதை

சுட்டெரிக்கும் சூரியனோடு
சுதந்திரமாய் வியர்வைக் குளியல்!

பட்டாம் பூச்சியின் முதுகில் ஏறி
பூவனச் சுற்றுலா!

தென்றலோடு
தேநீர் விருந்து!

குளிர் நிலவுடன்
கூட்டஞ் சோறு!

கடல் அலைகள் கேட்க
கதாகாலட்சேபம்!

சலசலக்கும் நதியோடு
சங்கீதக் கச்சேரி!

மழைத் துளிகளோடு
மனங்கொட்டி மாநாடு!

இயற்கையை இப்படி
ஏங்கி, ஏங்கிக் காதலிக்கும்
என் கதையில்
எதிரியென்று யாருமில்லை!

ஆம், இது உலகம் அதிகம்
கண்டிராதக் காதல் கதை!

எழுதியவர் : நந்தினி.சு (2-May-18, 5:51 pm)
பார்வை : 270

மேலே