தமிழினம் காத்திடுவோம்

வாய்சொல் வீரர்கள்தான் நம்மில் ஏராளம்,
செயல் வீரர்கள் என்னவோ சொர்ப்பம் தான்,
போராடுவோம் போராடுவோம் என்று ஆயிரம் குரல்கள் ஒலித்தாலும்,
அத்துனை குரல்களும் களம் காண்கின்றதா என்றால்,
அது கேள்விகுறி தான்.
போராட்டத்திற்கான காரணங்கள் நம்மில் ஏராளம்,
சாதியையும், மதத்தையும் புறந்தள்ளி
அரசியல் அடிமைத்தனத்தை அழித்தொழித்து,
அனைவரும் நம் உரிமைக்காகவும்,
நம் உணர்வுகளை வெளிக்கொணர கிடைத்த வெற்றிடமாய் இந்த களத்தை மாற்றி புரட்சியின் மூலம் புதிய மாற்றத்தை படைத்திட
தமிழனாய் ஒன்றினைவோம்.
தமிழினம் காத்திடுவோம்..

எழுதியவர் : கார்த்திக் கு (5-May-18, 5:29 pm)
பார்வை : 77

மேலே