பிடி சோற்றில் போர்
அஃறிணைகள் அவைகள்.
துன்புற்ற சாயல்களில்
வற்றாத பொருக்குகள்
என்பதன் மாற்றவியலா
நீள்வெட்டு சாட்சிகள்.
அலைகின்றன..
சாலைகளில் அவையும்
அவைகளில் சாலையும்.
மரணம் நிகர்த்த துயிலில்
சாலைகளின் ரௌத்திரம்
கனவுகளில் எறிகின்றன
கால் முறிக்கும் கற்களை.
உடன் திடுக்கிட்ட இரவை
கவ்வும் ஊளையில்
சிதறி சரியும் ஜாமம்.
கூச்சப்பகலில் சினமுற்ற
வெறியின் சாவாப்பசி
விடைகள் நொறுங்க
வேட்டைகளில் சிலிர்க்கும்.
உயிர்களின் ஓலமும்
உடலின் மயிர்களும்
பல்லிடுக்கில் சிக்கிக்கிழிய
பசியில் தணல் சுடர
நகைப்பை மறந்து
நாளொரு தினமும்
வேட்டையின் குரூரம்.
அஃறிணைகள்....
ஆடுவதில்லை நரவேட்டை.