அன்னையர் தினம்

------------------------------
ருவறையில் காத்திடும்
கருணையின் வடிவங்கள் !
அன்போடு ஆளாக்கும்
பண்பின் உருவங்கள் !
பாசத்தைப் பொழிந்திடும்
இணையிலா இதயங்கள் !

மண்ணில் நமக்கெல்லாம்
மாசில்லா நெஞ்சமுள்ள
மகத்தான உறவென்றால்
மறுப்பேது அன்னைதானே !

எனதன்னை மறைந்தாலும்
எத்தாயும் எனக்கு அன்னையே !

கரம்கூப்பி வேண்டுகிறேன்
உள்ளவரை உலகினில்
கைவிடாதீர் உள்ளங்களே
காலமும் அன்னையை !

வணங்குகிறேன் வையத்தில்
வாழ்கின்ற அன்னையர்களை !

" அன்னையர் தின வாழ்த்துக்கள் "

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-May-18, 6:46 am)
பார்வை : 6812

மேலே