காதல் சான்றுடன் விளக்குக

நெகிழ்ந்த இரவென
விழுந்த உன் கூந்தலில்
ஒரு கணம் கமழ்ந்து
மணந்த மலரின் வாசனை.
உனது வெயில் குளம்
என் கால் நனைத்தது
பருவத்தில் இடி விழ...
சுவரற்ற வீடுகளில்
தடம் பதித்த உன் பாதம்
இதயத்தில் நீ நடக்கிறாய்.
கனவிலும் கேட்கிறது
உன் குரல்கள் மந்திரங்களாக.
அமிழ்தில் வற்றவில்லை
முதிர்ந்து வரும்போது
யாதும் உன் சொற்கள்.
பற்றலாம் கைத்தலம்
நிலவறிந்த ரகசியத்தின்
துருவில்லா தாழ் முறிக்க.
மன்மத மதத்தில்
கண்கள் எய்தன கணைகள்
பார்வைகள் சார்ந்தன...
இனி சந்திக்கட்டும்
கற்பூரக்கண்கள்
காத்திருந்த காதலில்
கவிதை பயிரிட.

எழுதியவர் : ஸ்பரிசன் (18-May-18, 1:41 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 86

மேலே