மழைபெய்த இரவொன்றில்

மின்னல் ஒளி
இடியின் ஓசைகள்
அந்த வானில் மட்டுமல்ல...
காற்றில் மிதந்த குளிர்
எண்ணத்தில்
தகிதகித்த நெருப்பு...
உன் பார்வையில்
வினாக்கள் தேடிய
என் விழிகள்...
முதல் பதிலை
எத்தனித்து
என் விரல்கள்...
வெட்கத்தில் உதடு கடித்து
தலை குனிந்து
விடைகளை
விழுங்கி கொண்டாய்...
நம் பெருமூச்சு காற்றை
மட்டும் சல்லாபிக்க விட்டு
விலகி நின்றேன்...
இருவரும் மீண்டும்
வேள்விகளை
தொடர்ந்து கொண்டு;
உடைகளை மட்டுமே
நனைந்து காயவிட்டோம்
அன்று மழை
பெய்த இரவொன்றில்..

எழுதியவர் : சுரேஷ் குமார் (25-May-18, 12:34 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 4221

மேலே