திருமணம்
இரு மனங்கள் சேர
ஒரு மணம் திருமணம்
திரு என்பவள் திருமதி ஆகிறாள்
பெண் என்னும் ஒளி இன்று
இன்னொரு வீட்டில் ஒளியேற்ற போகிறது .
போகிற இடம் எல்லாம் வளம் செய்யும்
நதிக்கு ஒப்பாக
நீ போகும் இடம் எல்லாம்
சந்தோசம் மட்டும் பரவும் நல்ல ஒரு தருணம்
பெண்ணுக்கு இணையாய் இன்னொரு படைப்பு
இனி இல்லை உலகத்தில்
இறைவன் தனக்கு பதிலாய்
இந்த உலகத்திற்கு பெண்ணை அனுப்பினான்
அதை கொண்டாடத்தான் இந்த திருமணம்
மணம் வீசும் மலர்களுக்கு நடுவில்
நீயும் ஒரு மலராய்
மலர் அழகா ?நீ அழகா ?
இதற்கு ஒரு பட்டிமன்றம் வைத்தாலும்
விடை கிடைக்காது
அத்தனை அழகு கொண்ட உன்னை
கைபிடிப்பான் உன் மணாளன்
அவனுக்கு என் வாழ்த்துக்கள்
இரு மனதையும் இணைக்கும்
இந்த பந்தம் என்றும் குறையாது
வாழ என் வாழ்த்துக்கள்

