விழியின் நிழலில் ஒரு கடிதம்
உன் விழியின் நிழலில்
விழுந்து கிடந்தது
ஒரு முகவரி இல்லாத கடிதம்
நான் அதை
நிலவின் ஒளியில்
பிரித்துப் பார்த்த போது
நீ எனக்கு எழுதிய
காதல் வரிகள் புரிந்தது
உன் இதழில் குவிந்து கிடந்த
புரியாத மௌனங்கள்
இதயத் தென்றலில்
இசையாய் மலந்தது
உன் நினைவுகளின்
ஸ்பரிசம்
நெஞ்சில் ஒரு
வசந்த வாசலை
திறந்து வைத்தது
----கவின் சாரலன்