நீ போதும்

கவிப்பாடும் மன்னனுக்கு,
கவிச்சொல்லும் காதல் சொல்லவா?
நிழலான உந்தன் கவியை,
நிஜமாக நானும் தீட்டவா?
அலையாக நானும் கரையேற வேண்டும்...
அலையாக நீயும், நானும் கரையேற வேண்டும்....

பனிப்பொழிவு வருகிறபோது
நெருப்புக்கும் குளிருமா?
தோட்டத்து பூக்கள்கூட
அனலில்தான் மலருமா?
கண்ணா நான் இளங்கன்னி,
தேய்கிறேனே உன்னை எண்ணி,
எனை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிடு.
எனக்கே எனக்கென்று உனை அள்ளிக் கொடு.

கண்ணா உன் துறுதுறுக் கண்கள் என்னைதான் ரசிக்கிறதா?
நான் பார்க்கும் போது மட்டும் பொய்யாக நடிக்கிறதா?
உயிரே நீ மறைத்தாலும் ,
உணர்வாலே நான் அறிவேன்...
அன்பே நான் உன்னாலே வாழ்ந்திருப்பேன் மண்மேலே...
பூவாக நான் வாடுவது தெரியலையா?
வரம் சேர்க்க என் தோளில் மலர்மாலையாய் நீ போதும்.

எழுதியவர் : ஸ்ரீதேவி (7-Jun-18, 4:29 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : nee pothum
பார்வை : 575

மேலே