கனவுகள் மெய்ப்பட வேண்டும்

தாய் கைபிடித்து நடந்த தாய்மண்ணில்
மீண்டும் என் சேய் பிடித்து நடந்திட வேண்டும்
இரத்தினமாய் மிளிர்ந்த என் தாய்த்திரு நாடு
மீண்டும் மிளிர வேண்டும்

மொட்டுக்கள் ,பூக்கள் ,காய்கள்,பழங்கள்
மலர்ந்து விளையாட வேண்டும்

நாடகதாரிகளின் முகத்திரை கிழிந்திட வேண்டும்
நாட்டுமக்கள் நலமாய் செழிக்க வேண்டும்
பெரும்பான்மை ,சிறுபான்மை என்ற
பிரிவினை வாதமின்றி நலம்பெற்று வாழ்ந்திட வேண்டும்
என் அழகுத்தமிழால் பதாகைகள்
பதிந்திட வேண்டும்

பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாய்
எம் தாய் நாடு இருக்க வேண்டும்
உண்டியல் இல்லாத கோயில்கள்
இருக்க வேண்டும்
ஆசையெனும் பெரும் அழுக்கு
அகன்றிட வேண்டும்
அன்பும் பண்பும் நிறைந்த
தாயகமாய் திகழ்ந்திட வேண்டும்
இன சுதந்திரத்துக்காய் போராடி
மாவீரர்களான எங்கள் மறவர்கள்
கனவுகள் மெய்ப்பட வேண்டும் .

மட்டுநகர் கமல்தாஸ்
02/06/2017

எழுதியவர் : மட்டுநகர் கமல்தஸ் (8-Jun-18, 9:29 am)
பார்வை : 135

மேலே