காதல்
அவன் கைகளில்
வந்தடைந்தாள் அவள்
அவன் அணைக்க
அவள் இணைய
இதழ்கள் மேல் இதழ்கள்
உறவாட மாரி முத்தாய்
ஆசையால் இணைந்தனர்
அவ்விருவர் சேர்க்கையில்
மேலெழுந்தது காமத்தீ ,
அத்தீயையும் உள்ளிழுத்து
அணைத்தது அங்கு,
உறவாய் எழுந்த காதல் நீர்,
அவர்கள் வாழ்வில் நன்னீராய்
காதல் பன்னீராய்................
ஆசையால் வந்த இணைப்பு
காமம் தந்திட காமத்தில்
எழுந்ததோர் ஞானம் காதல்